Thursday 2 March 2017

3RD MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு

மகளிர் ஹாக்கி: பெலாரஸை பந்தாடியது இந்தியா
பெல்ஜியத்துக்கு எதிரான முதல் ஹாக்கி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.


இவ்விரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஹாக்கி டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய இந்திய அணி 11-ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் முதல் கோலை அடித்தது. அதைத் தொடர்ந்து 15-ஆவது நிமிடத்தில் அடுத்த கோலை அடித்தது. இந்த இரு கோல்களையும் நவ்ஜோத் கெளர் அடித்தார்.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது கால் ஆட்டத்தின் 29-ஆவது நிமிடத்தில் பூனம் பர்லா கோலடிக்க, இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது. 3-ஆவது கால் ஆட்டத்தின் 37-ஆவது நிமிடத்தில் பெலாரஸின் ஸ்வியத்லானா கோலடித்தார்.
இதன்பிறகு நடைபெற்ற 4-ஆவது கால் ஆட்டத்தின் 57 மற்றும் 60-ஆவது நிமிடங்களில் முறையே இந்தியாவின் தீப் கிரேஸ் இக்கா, குர்ஜித் கெளர் ஆகியோர் கோலடிக்க, இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
சர்வதேச கிரிக்கெட்: டுவைன் ஸ்மித் ஓய்வு
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டுவைன் ஸ்மித்.
2004 ஜனவரி 2-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்மித், தனது முதல் போட்டியிலேயே சதமடித்தார்.
அதைத் தொடர்ந்து அதே ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய ஸ்மித், அதன்பிறகு மேற்கிந்தியத் தீவுகளின் முன்னணி வீரர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
கடைசியாக 2015 உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடினார் ஸ்மித். அதன்பிறகு சர்வதேச போட்டியில் விளையாடாதபோதும், ஐபிஎல், கரீபியன் லீக், வங்கதேச லீக் போன்ற டி20 போட்டிகளில் தொடர்ந்து கலக்கி வந்தார். தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீகில் விளையாடி வரும் ஸ்மித், வரும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்காக களமிறங்கவுள்ளார்.

உலகம் :

பிரெக்ஸிட் மசோதாவில் திருத்தம் செய்ய பிரிட்டன் நாடாளுமன்ற மேலவை தீர்மானம்: பிரதமர் தெரசா மேவுக்குப் பின்னடைவு
ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேற வகை செய்யும் பிரெக்ஸிட் மசோதாவில் திருத்தம் தேவை என்று அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் தீர்மானம் நிறைவேறியது.
ஆளும் கட்சிக்கு மேலவையில் பெரும்பான்மை கிடையாது. இது பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்குத் தனிப்பட்ட தோல்வி என்றாலும்கூட, அரசு கவிழும் அபாயம் இல்லை.
இது பிரதமர் தெரசா மேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
பிரெக்ஸிட் மசோதாவுக்கு நாடாளுமன்ற கீழவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிவிட்ட நிலையில், மேலவையில் அந்த மசோதா நிறைவேற்றப்படுவது வெறும் சடங்காக கருதப்பட்டது. இந்த நிலையில், மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பின்போது, ஐரோப்பியர் குடியேற்றம் தொடர்பாக மசோதாவில் முக்கியத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று 358 எம்.பி.க்களும், திருத்தம் தேவையில்லை என்று அரசுக்கு ஆதரவாக 256 பேரும் வாக்களித்தனர்.

இந்தியா:

கப்பல் தகர்ப்பு ஏவுகணை: நீர்மூழ்கியிலிருந்து ஏவி வெற்றிகரமாக சோதனை
எதிரி நாட்டு கப்பலை தகர்த்து அழிக்கும் ஏவுகணையை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தி இந்தியக் கடற்படை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்தது.
இதன்மூலம், கடற்படைக்கு கூடுதல் பலம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியானது கடற்படைக்கு அடுத்தகட்ட பாய்ச்சல் ஆகும்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஸ்கார்பியன் வகையைச் சேர்ந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மும்பையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் முதலாவதாக தயாரிக்கப்பட்டுள்ள கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து எதிரி நாட்டு கப்பலை துல்லியமாகத் தாக்கி தகர்க்கும் ஏவுகணை பொருத்தப்பட்டு வியாழக்கிழமை சோதனை செய்யப்பட்டது.
அரபிக் கடலில் இருந்து தரைதளத்தில் மிக தொலைதூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கி தகர்த்தது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை பிரெஞ்சு கடற்படை மற்றும் ஆற்றல் நிறுவனம் வடிவமைத்தது.
இணைய வழியில் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய விரைவில் ஆதார் எண் கட்டாயம்
இணைய வழியில் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரியொருவர் வியாழக்கிழமை கூறியதாவது:
ரயில்வே இணையதளம் வாயிலாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு, ஆதார் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. அந்த தளத்தில் முதன்முறையாக பதிவு செய்யும்போது, ஆதார் எண்ணை குறிப்பிட்டாக வேண்டும். இந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
தற்போது, சில இடைத் தரகர்கள் இணைய வழியில் போலியான பெயர்களில் முன்பதிவு செய்து பயணச்சீட்டுகளை பெற்று அவற்றை அதிக விலைக்கு வேறு நபர்களுக்கு விற்றுவிடுகின்றனர்.
ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்ட பின்பு, இத்தகைய மோசடிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.
லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது தில்லி மெட்ரோ
மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணியில் ஒரே மாதத்தில் "யு' வடிவிலான 200 கர்டர்களை நிறுவியதன் மூலம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) இடம் பிடித்துள்ளது.
நொய்டா மெட்ரோ ரயில் நிறுவனத்திற்காக (என்எம்ஆர்சி) நொய்டா - கிரேட்டர் நொய்டா இடையேயான 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பால ரயில்வே வழித் தடத்தை அமைக்கும் பணியை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இதற்காக "யு' வடிவமான சிமிண்ட் கான்கிரீட் கர்டர்களை அமைக்கும் பணியில் டிஎம்ஆர்சி ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், 2.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு 200 "யு' வடிவிலான கர்டர்களை ஒரே மாதத்தில் நிறுவுவதற்கு டிஎம்ஆர்சி நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து, இந்தியாவில் மெட்ரோ ரயில்வே வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெறும் இடங்களிலேயே ஒரே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான "யு' கர்டர்களை நிறுவிய நிறுவனமாக டிஎம்ஆர்சி லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து, இதற்கான சான்றிதழ் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மங்கு சிங்கிடம் "லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனத்தின் உதவி ஆசிரியர் ஸ்மிதா ஜோசப் வியாழக்கிழமை வழங்கினார்.
மத்திய அரசு பணிக்கு 2.80 லட்சம் பேர் தேர்வு
மத்திய அரசு பணிகளுக்கு 2.80 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களில் சுமார் 2 லட்சம் பேர் மத்திய அரசின் காவல், வருமானவரி மற்றும் சுங்கத்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தற்போது சுமார் 33 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். தற்போது வருமான வரித்துறையில் சுமார் 46 ஆயிரம் ஊழியர்களே உள்ளனர். இந்த எண்ணிக்கை 80 ஆயிரமாக அதாவது இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கூடுதல் ஊழியர்கள் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல துறைகளில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுட்டு வருவதையடுத்து அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஊழியர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு ஊழியர்கள் தேர்வு நடைமுறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி மத்திய அரசு பணிகளுக்கு 2.80 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களில் சுமார் 2 லட்சம் பேர் மத்திய அரசின் காவல், வருமானவரி மற்றும் சுங்கத்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழகம்:

உள்நாட்டு சுற்றுலாவில் 3வது ஆண்டாக தமிழகம் தொடர்ந்து முதலிடம்
உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் மாநிலமாக தமிழகம் 3வது முறையாக தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் தமிழகத்துக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து 34 கோடியே 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அதே சமயம், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 3% அதிகரித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்தைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் விளங்குகிறது.
தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கோயில்கள் ஏராளமாக இருப்பது முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரம் தமிழகத்தில் மிகச் சிறந்த மருத்துவமனை வசதிகள் இருப்பதும், டிராவல் ஏஜெண்டுகளும், மாநில சுற்றுலாத் துறையும் மிகச் சிறந்த சேவையை செய்வதும் இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.

வர்த்தகம் :

2020 க்குள் உலகின் மிகப்பெரிய ஒயின் சந்தை பட்டியலில் இரண்டாமிடம் சீனாவுக்கு!
தற்போது உலக ஒயின் சந்தையில் சீனா 4 ஆம் இடம் வகித்து வருகிறது. சீனாவில் ஒயின் அருந்துவோர் மற்றும் பிற நாடுகளுக்கு ஒயின் ஏற்றுமதி செய்வோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு சீனாவில் உள்நாட்டு, வெளிநாட்டு ஒயின் விற்பனை 21 பில்லியன் டாலர்களைக் கடந்து சென்று கொண்டிருப்பதால் கூடிய விரைவில் உலக ஒயின் சந்தையில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்பதோடு உற்பத்தி மற்றும் விற்பனையிலும் சீனா பிரிட்டன் மற்றும் ஃப்ரான்ஸைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை வெகு எளிதில் கைப்பற்றவும் வாய்ப்பிருப்பதாக வின் எக்ஸ்போ எனும் ஒயின் தொழிற்சாலை கண்காட்சியொன்று தனது கண்காட்சியின் இறுதியில் தெரிவித்தது.
சீனா உலகச் சந்தையில் இரண்டாம் இடத்தை அடைய வேண்டுமானால் அது இனி வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 39.8% வளர்ச்சியைத் தொடர்ந்து தக்க வைக்க வேண்டும். என வின் எக்ஸ்போ நிறுவனத்தின் செயல் இயக்குனர் குல்லாமா டெக்லிஸ் தெரிவித்துள்ளார்.

Click here to download 3rd March Review in Tamil

No comments:

Post a Comment