இந்தியா:
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்தியாவும்-ஸ்பெயினும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி
அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை ஸ்பெயின் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை கைகுலுக்கி வரவேற்ற அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோய்.
பயங்கரவாதத்துக்கு எதிராக போர் புரிய இந்தியாவுடன் ஸ்பெயின் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
அரசுமுறைப் பயணமாக ஸ்பெயினுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோயை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
ஜெர்மனியிலிருந்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்குச் சென்ற மோடி, அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோயை புதன்கிழமை காலை சந்தித்தார்