மாநிலசெய்திகள்
தமிழ்நாடு
நியூட்ரினோ திட்டத்தினால் பாதிப்பு இல்லை : விஞ்ஞானிகள் கருத்து
- நியூட்ரினோ திட்டத்தினால் ஆபத்து இல்லை என்றும் அது இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் திட்டம் எனவும் தமிழக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஆய்வு மையத்தில் ஆப்டிக்கல் தொலை நோக்கி மூலம் நம்மை சுற்றியுள்ள துகள்கள் கண்டறியப்படும் என்றும் இதனால் சுற்றுசூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.