தமிழகம்
பிப். 11-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 விஏஓ தேர்வு: 20.7 லட்சம் பேர் எழுதுகிறார்கள்: நடைமுறைகள் அறிவிப்பு
- பிப்ரவரி 11 அன்று நடக்கும் ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்’ (tnpsc group-4 exam ) தேர்வில் விஏஓ பணிகளுக்காக இதுவரை தேர்வாணைய வரலாற்றில் இல்லாத அளவுக்கு 20.7 லட்சம் விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் தேர்வு எழுத உள்ளனர்.
முக்கியமான குறிப்புக்கள்
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும்.
- 1929இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது.
தலைமைச் செயலக மக்கள் தொடர்பு அதிகாரியாக ஷேக் முகமது நியமனம்
- தலைமைச் செயலக மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த கலைநேசன் மாற்றப்பட்டு, ஷேக் முகமது நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கியமான குறிப்புக்கள்
- சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ளது.
- ஷேக் முகமது - அதிமுகவில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரான தமிழ் மகன் உசேனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டில் தமிழகம் முழுவதும் தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா வசதி: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
- அடுத்த ஆண்டில் அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
முக்கியமான குறிப்புக்கள்
- பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் - பிரதீப் யாதவ்
- தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் - டி.ஜெகந்நாதன்
- ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்- சீனிவாசன்
- செயலாளர் - எம்.பழனிச்சாமி
- பள்ளிக்கல்வி இயக்குநர் -ஆர்.இளங்கோவன்
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவுக்கு வெண்கல சிலை: பிப்.24-ம் தேதி திறக்க ஏற்பாடுகள் தீவிரம்
- அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் ஜெயலலிதாவுக்கு முழுஉருவ வெண்கலச் சிலை அமைக்கும் பணிகள் தீவீரமாக நடந்து வருகின்றன. இந்தச் சிலை அவரது பிறந்த நாளான பிப்.24-ம் தேதி திறக்கப்படுகிறது.
முக்கியமான குறிப்புக்கள்
ஜெயலலிதா
- முன்னாள் தமிழக முதல்வர் ,அதிமுக பொதுச் செயலாளர்.
- 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி காலமானார்.
இந்தியா
பெங்களூரு மெட்ரோ ரயிலில் மகளிருக்கு தனிப் பெட்டி: மார்ச் மாதம் முதல் அமல்
- பெங்களூரு மெட்ரோ ரயிலில் வருகிற மார்ச் மாதம் முதல் மகளிருக்கு தனிப் பெட்டி வசதி செய்யப்பட இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
முக்கியமான குறிப்புக்கள்
- பெங்களூரு மெட்ரோ ரயில் - 2011 அக்டோபர் 20-ஆம் தேதி நடுவண் அமைச்சர் கமல்நாத் தொடங்கி வைத்தார்.
- இது கொல்கத்தா, தில்லி நகரங்களுக்கு அடுத்து இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள மூன்றாவது விரைவுப் போக்குவரத்து அமைப்பு.
ஒரே நாளில் கோடீஸ்வர கிராமமாக மாறிய அருணாச்சலப் பிரதேசத்தின் போம்ஜா!
- அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ள போம்ஜா கிராமம் ஆசியாவின் பணக்கார கிராமங்களில் ஒன்றாக தற்போது மாறியுள்ளது.
மார்ச் 11-ல் மூன்று மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் மக்களவை தொகுதிகளுக்கும் பிஹாரின் அராரியா மக்களவை தொகுதிக்கும் வரும் மார்ச் 11-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
- அதேபோல், பிஹாரின் பபுவா மற்றும் ஜெகனாபாத் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அதே நாளில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான குறிப்புக்கள்
- உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் தொகுதிகளின் எம்.பி.க்களான யோகி ஆதித்யநாத்தும், கேசவ் பிரசாத் மவுரியாவும் தத்தம் பதவியை ராஜினாமா செய்தனர். முதல்வர், துணை முதல்வர் பதவியை ஏற்கும்வகையில் அவர்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.
- பிஹாரின் பபுவா சட்டப்பேரவை உறுப்பினர் பூஷன் பாண்டே, ஜெகனாபாத் சட்டப்பேரவை உறுப்பினர் முந்த்ரிகா சிங் யாதவ் ஆகியோரது மறைவை அடுத்து அந்த இரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.
உலகம்
மாலத்தீவு அரசியல் நெருக்கடி: ட்ரம்ப், மோடி ஆலோசனை
- மாலத்தீவில் நிகழும் அரசியல் நெருக்கடி குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பும், மோடியும் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
- இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், “இரு நாட்டு தலைவர்களும் இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு ஒன்றாக பணியாற்றுவதற்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
- மேலும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
முக்கியமான குறிப்புக்கள்
- மாலத்தீவு இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது.
- அரசுத்தலைவர் - முகமது வாகித் அசன்
வணிகம்
கத்தாரில் இந்தியர்களுக்கு தொழில் வாய்ப்பு: தோஹா வங்கி தலைமை செயல் அதிகாரி பேட்டி!
கத்தாரில் புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன, இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கத்தார் நாட்டின் தோஹா வங்கி தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன் கூறினார்.
முக்கியமான குறிப்புக்கள்
- மயிலாடுதுறையில் பிறந்து சீதாராமன் அவர் தற்போது முன்னணி வங்கியாளராக விளங்கி வருகிறார்.
முருகப்பா குழுமத் தலைவராக எம்.எம். முருகப்பன் நியமனம்
- முருகப்பா குழுமத்தின் செயல் தலைவராக எம்.எம்.முருகப்பன் பொறுப்பேற்றுள்ளார். ஏற்கெனவே இப்பொறுப்பில் இருந்த ஏ. வெள்ளையன் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவர் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
முக்கியமான குறிப்புக்கள்
- 1900 ஆண்டு உருவான முருகப்பா குழுமம் தற்போது ரூ 30,000 கோடி மதிப்புள்ள குழுமமாகத் திகழ்கிறது.
- ஏ. வெள்ளையன் - அண்ணா பல்கலையில் ரசாயன பொறியியலில் இளங்கலைப் பட்டமும், மிச்சிகன் பல்கலையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
விளையாட்டு
உலக குத்துச் சண்டை: தான்சானியா வீரர் சாதிக்கி மொம்பாவுடன் மோதும் காமன்வெல்த் தங்கம் வென்ற அகில் குமார்
- புதுடெல்லியில், பிப்ரவரி 10 அன்று நடைபெற உள்ள குத்துச்சண்டைப் போட்டியில் தான்சானியா வீரர் சாதிக்கி மொம்பாவுடன் காமன்வெல்த்தில் தங்கம்வென்ற அகில் குமார் மோத உள்ளார்.
முக்கியமான குறிப்புக்கள்
- அகில் குமார் மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றவர்.
- சாதிக்கி மொம்பா அனுபவமிக்க ஒரு குத்துச்சண்டை வீரர், கலந்துகொண்ட 37 போட்டிகளில் 25 முறை வென்று சாதித்தவர்.
FEB-9 PDF Download
No comments:
Post a Comment