Sunday 29 January 2017

29TH & 30TH JANUARY REVIEW IN Tamil FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:
"இஸ்லாமாபாதில் விரைவில் சார்க் மாநாடு'
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் சார்க் மாநாடு விரைவில் நடைபெறும் என்று அந்நாட்டுப் பிரதமரின் வெளியுறவுக் கொள்கைகளுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் நம்பிக்கை தெரிவித்தார்.


இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பூடான், நேபாளம், மாலத்தீவுகள் ஆகிய 8 நாடுகளை உள்ளடக்கியது சார்க் அமைப்பு. ஒவ்வோர் ஆண்டும், இந்த அமைப்பின் சார்பில் மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்த வகையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சார்க் மாநாடு நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், காஷ்மீரின் உரியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல், எல்லையில் நிலவிய பதற்றம் உள்ளிட்டவை காரணமாக அந்த மாநாட்டைப் புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்தது. மேலும் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதையடுத்து, அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது.
அப்போது, இஸ்லாமாபாதில் 19-ஆவது சார்க் மாநாட்டை விரைவில் நடத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக இருக்கிறது என்று அஜீஸ் தெரிவித்தார்.
சிரியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப ரஷ்யா திட்டம்
சிரியா அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. ரஷ்ய விமானப்படையின் உதவியுடன் கிளர்ச்சிப் படைகளின் தலைமையிடமான அலெப்போ நகரை அதிபர் ஆசாத் அண்மையில் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து சிரியாவில் முகாமிட்டிருந்த ரஷ்ய போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்பின.
ரஷ்யா, ஈரான், துருக்கி நாடுகளின் ஏற்பாட்டில் அதிபர் ஆசாத் தரப்புக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் அண்மையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதைத் தொடர்ந்து சிரியாவுக்கு மீண்டும் போர் விமானங்கள், போர்க்கப்பல்களை அனுப்ப ரஷ்யா முடிவு செய்திருப்பதாக ரஷ்ய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் சிரியாவில் மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரமடையும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தியா:

குடியரசு தின நிறைவு விழா: பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில் பிரணாப், மோடி பங்கேற்பு
தில்லியில் குடியரசு தின நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற முப்படை வீரர்களின் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியரசு தினத்தையொட்டி கடந்த 26-ஆம் தேதி தில்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், மாநிலங்கள் சார்பிலும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் முகமது பின் சையது அல் நஹ்யான்,  உக்ரைன் நாட்டின் முதலாவது துணைப் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஸ்டீபன் குபியும் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து குடியரசு தின விழா இன்று நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் முப்படை வீரர்கள் பாசறைக்கு திரும்பும் கோலாகல நிகழ்ச்சி தில்லி விஜய் சதுக்கத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் அமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
"உஜாலா' திட்டம்: பிகாரில் 1 கோடி மலிவு விலை எல்இடி பல்புகள் வினியோகம்
பிகாரில், மின்சாரத்தை சேமிக்கும் 1 கோடிக்கும் மேற்பட்ட எல்இடி மின்விளக்குகள் மலிவு விலையில் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்சார சிக்கனத்தை வழங்கக்கூடிய "எல்இடி' விளக்குகளை பொதுமக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம், எரிசக்தியை மிச்சப்படுத்த "மலிவு விலை எல்இடி பல்புகள் மூலம் உன்னத வாழ்வு' (உஜாலா) என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின்படி, மத்திய அரசுக்குச் சொந்தமான "எனர்ஜி எஃபிஷியன்ஸி சர்வீஸஸ்' (இஇஎஸ்எல்) நிறுவனம் "எல்இடி' விளக்குகளைத் தயாரித்து மாநில அரசு அமைப்புகள் மூலம் மலிவு விலையில் வினியோகித்து வருகிறது.
பிகார் மாநிலத்தில் இந்த மின்விளக்குகள் ரூ.70 ரூபாய்க்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரூ.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகம்:

கூடங்குளத்தில் 6 உலைகள் மட்டுமே சாத்தியம்: ஆர்.எஸ். சுந்தர் உறுதி
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் இந்திய-ரஷிய கூட்டு ஒப்பந்தப்படி 6 உலைகள் மட்டுமே அமைக்க அனுமதி உள்ளது; கூடுதல் உலைகள் அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கூடங்குளத்தில் உள்ள அணு மின் திட்ட வளாகத்தில் செய்தியாளர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அணு மின் திட்ட வளாகத்தில் உள்ள முதல், இரண்டாம் உலை செயல்பாடுகள், இப்போதைய நிலை மற்றும் 3, 4ஆவது உலைகளுக்கான கட்டுமானப் பணி, எதிர்காலத் திட்டங்கள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
முதல், இரண்டாம் உலைகளின் நிலைய இயக்குநர் ஹெச்.என். சாஹு, தலைமைக் கண்காணிப்பாளர் எஸ்.வி. ஜின்னா, தலைமைக் கட்டுமானப் பொறியாளர் எஸ். ஜெயகிருஷ்ணன், பயிற்சி கண்காணிப்பாளர் ஆர்.எஸ். சாவந்த், விஞ்ஞானிகள் பி. பண்டாரம், எஸ். திருநாவுக்கரசு, ஜே. ஆபிரகாம் ஜேக்கப், மனித வள மேம்பாட்டுப் பிரிவு முதுநிலை மேலாளர் ஜே. தேவப்பிரகாஷ் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

விளையாட்டு :

ஃபெடரருக்கு 18-ஆவது கிராண்ட்ஸ்லாம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 18-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார் ஃபெடரர்.
20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த வீரரான ஃபெடரர், இன்றளவிலும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை 3 மணி, 37 நிமிடங்கள் நடைபெற்ற இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை தோற்கடித்தார்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த இறுதி ஆட்டத்தில் முதல் 4 செட்களை இருவரும் மாறி மாறி கைப்பற்ற, ஆட்டம் 5-ஆவது செட்டுக்கு நகர்ந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த செட்டின் முதல் கேமிலேயே நடாலிடம் சர்வீஸை இழந்தார் ஃபெடரர். இதனால் 5 கேம்களின் முடிவில் நடால் 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
சையது மோடி பாட்மிண்டன் சிந்து, சமீர் சாம்பியன்
சையது மோடி கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் சிந்து 21-13, 21-14 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை தோற்கடித்தார்.
ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் சமீர் வர்மா 21-19, 21-16 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான சாய் பிரணீத்தை தோற்கடித்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஜோடி தங்களின் இறுதிச் சுற்றில் 22-20, 21-10 என்ற நேர் செட்களில் அஸ்வினி பொன்னப்பா-சுமீத் ரெட்டி ஜோடியைத் தோற்கடித்தது.

வர்த்தகம் :

பேமென்ட் வங்கி தொடங்க தபால் துறைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி
பேமென்ட் வங்கி தொடங்குவதற் கான இறுதி அனுமதியை தபால் துறைக்கு ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது. இதனை தபால் துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்திருக்கிறது. திட்டமிட்டபடி விரைவில் பேமென்ட் வங்கி செயல்படத் தொடங்கும் என தபால் துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறினார். பார்தி ஏர்டெல் மற்றும் பேடிஎம் ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு பேமென்ட் வங்கி தொடங்குவதற்காக முழுமை யான அனுமதி இந்திய தபால் துறைக்கு கிடைத்துள்ளது.
இந்த வங்கியின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக ஏபி சிங் நியமனம் செய்யப்பட் டிருக்கிறார். பங்குவிலக்கல் துறை யின் இணைச் செயலாளராக இருந்தவர். ஆதார் அமைப்பை உருவாக்கிய குழுவில் இவரும் ஒருவர்.
கடந்த 2015-ம் ஆண்டு 11 நிறு வனங்களுக்கு பேமென்ட் வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி கொள்கை அளவிலான அனுமதியை வழங் கியது. இதில் மூன்று நிறுவனங்கள் பேமென்ட் வங்கி தொடங்கும் திட்டத்தில் இருந்து விலகிவிட்டன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் பேமென்ட் வங்கியை செயல்படுத்தியது. இன்னும் சில மாதங்களில் பேடிஎம் பேமென்ட் வங்கியை தொடங்க திட்டமிட்டிருக்கிறது. இதற்காக 400 கோடி ரூபாய் முதலீட்டை இந்த நிறுவனம் செய்திருக்கிறது.

Click here to download 29th & 30th January Review in Tamil

No comments:

Post a Comment