Tuesday 28 February 2017

27th & 28th FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய லா லா லேண்ட்
ஆஸ்கர் விருதுக்காக 14 பிரிவுகளில் போட்டியிட்ட லா லா லேண்ட் திரைப்படம் 6 பிரிவுகளில் விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது மூன்லைட் படத்துக்கு கிடைத்தது.


ஹாலிவுட் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இதில் மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 89-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள டால்ஃபி தியேட்டரில் இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
ஈரான் கடற்படைப் போர்ப் பயிற்சியில் ஏவுகணைகள் பரிசோதனை
ஈரான் தனது கடற்படைப் போர்ப் பயிற்சியின்போது நவீன ஏவுகணைகளை ஏவி பரிசோதித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ’ஃபர்ஸ்' செய்தி நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: ’விலாயத் 95' என்ற பெயரில் தெற்குக் கடல் பகுதியில் நிகழ்த்தப்பட்ட கடற்படைப் போர்ப் பயிற்சியின்போது ’நாஸர்' என்ற ’குரூஸ்' வகை ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹுசேன் டெஹ்கான் கூறினார் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மேலும், ’தஸ்னீம்' செய்தி நிறுவனம் கூறுகையில், ’லேசர்' கதிர்களின் வழிகாட்டுதலுடன் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் மற்றொரு வகை ஏவுகணையும் கடற்படைப் போர்ப் பயிற்சியின்போது பரிசோதிக்கப்பட்டது என்றது. ரஷியாவின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை அடிப்படையாகக் கொண்டு அந்த ஏவுகணை உருவாக்கப்பட்டதாக 2012-ஆம் ஆண்டே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணைகளின் நவீன ரகங்கள் எவ்வளவு தூரம் பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
சூரியனுக்கு நாஸாவின் விண்கலம்! அவிழுமா மூன்று (மர்ம) முடிச்சு?
சூரியனுக்கு அடுத்த ஆண்டு விண்கலம் அனுப்ப, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாஸா) திட்டமிட்டுள்ளது.
சூரியன் குறித்து அந்த விண்கலம் மேற்கொள்ளவிருக்கும் ஆய்வுகள் மூலம், அந்த நெருப்பு கோளத்தைச் சுற்றியுள்ள 3 மர்மங்களுக்கு விடை கிடைக்குமா என்பதுதான் விஞ்ஞானிகளிடையே தற்போது மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது.
எனினும், இதுவரை இல்லாத அளவு நெருக்கத்தில் சென்று, இந்த விண்கலம் சூரியனைக் குறித்து மேற்கொள்ளவிருக்கும் ஆய்வு, அந்த மர்ம முடிச்சுகளுக்கு விடை தருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்கிறார் நாஸா விஞ்ஞானி எரிக் கிறிஸ்டியன்.
அமெரிக்க பட்ஜெட்: ராணுவத்துக்கு கூடுதலாக ரூ.3.67 லட்சம் கோடி ஒதுக்க திட்டம்
அமெரிக்க பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக 5,400 கோடி டாலர் (சுமார் ரூ. 3.67 லட்சம் கோடி) ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக 5,400 கோடி டாலர் (சுமார் ரூ.3.67 லட்சம் கோடி) ஒதுக்கப்படும் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதிகாரபூர்வ அறிவிப்பு அதிபர் டிரம்ப்பின் நாடாளுமன்ற உரையில் வெளியாகும் என்றார் அவர்.
முன்னதாக, அமெரிக்க மாகாண ஆளுநர்கள் சங்க மாநாடு அதிபர் டிரம்ப் தலைமையில் வாஷிங்டனில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் டிரம்ப் கூறியதாவது:
நான் அதிபராகப் பதவியேற்ற பின்னர் வெளியாகவுள்ள முதல் பட்ஜெட் நாட்டின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பு தொடர்பான பட்ஜெட்டாக இருக்கும். அந்த இரு அம்சங்களுக்கே நிதி அறிக்கையில் கூடுதல் அழுத்தம் கொடுக்கப்படும். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் தொகை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
பல ஆண்டுகளாகப் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் நலிவுற்றுள்ள நமது பாதுகாப்புப் படைகளை மீண்டும் வலுவான சக்தியாக மாற்ற அதிக நிதி ஒதுக்கப்படும். முறையான அறிவிப்பை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வில் வெளியிடுவேன்.

இந்தியா:

நாட்டின் முதல் ’ஹெலிகாப்டர்' நிலையம் தில்லியில் திறப்பு
நாட்டின் முதல் ஒருங்கிணைந்த ’ஹெலிபோர்ட்' (ஹெலிகாப்டர் நிலையம்), தில்லியில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
பொதுத் துறை நிறுவனமான ’பவான் ஹன்ஸ்' நிறுவனத்தால், தில்லியில் ரோஹிணி பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ள அந்த ஹெலிகாப்டர் நிலையம், தினமும் 150 பயணிகளை கையாளும் வசதியை கொண்டது. மேலும், 16 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கும் வகையிலான 4 மூடிய கட்டுமானங்களும், 9 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கக் கூடிய திறந்தவெளி நிறுத்துமிடங்களும் உள்ளன.
இந்த ஹெலிகாப்டர் நிலையத்தை, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார். பின்னர், அவர் பேசியதாவது:
தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக, ஹெலிகாப்டர்களுக்கான ஒருங்கிணைந்த நிலையம் தில்லியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொருத்தவரை, ஹெலிகாப்டர் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
உலக அளவில் ஒப்பிடும்போது, நமது நாட்டில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்றார் அசோக் கஜபதி ராஜு.
இந்த நிகழ்ச்சியில், விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால், பவான் ஹன்ஸ் நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநர் பி.பி.சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநர் துர்கா பிரசாத் ஓய்வு
இந்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) தலைமை இயக்குநர் பதவியிலிருந்து துர்கா பிரசாத் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார்.
1981-ஆம் ஆண்டின் தெலங்கானா பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான துர்கா பிரசாத், சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதவியேற்றார். ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை ஒடுக்கியதில் துர்கா பிரசாத்துக்கு பெரும் பங்கு உள்ளதாக சிஆர்பிஎஃப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தாம் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அண்மையில் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிஆர்பிஎஃப் 45-வது படைப்பிரிவு கமாண்டர் சேத்தன் சீத்தாவை துர்கா பிரசாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தலைமை இயக்குநர் பதவி காலி: இந்நிலையில், துர்கா பிரசாத் ஓய்வு பெற்றதை அடுத்து, சிஆர்பிஎஃப் அமைப்பின் புதிய தலைமை இயக்குநராக மத்திய அரசு யாரையும் நியமிக்கவில்லை. எனினும், தலைமை இயக்குநர் பதவியை கூடுதலாக கவனிக்குமாறு கூடுதல் தலைமை இயக்குநர் சுதீப் லக்தாக்கியாவை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஏர் இந்திய விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தில் பணி
ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 186 Store Agent, Office Agent, Handyman, Utility Agent cum Driver பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 மற்றும் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 186
பணியிடம்: மும்பை
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Store Agent - 84
2. Office Agent - 32
சம்பளம்: மாதம் ரூ.14,610
3. Handyman - 63
சம்பளம்: மாதம் ரூ.11,040
4. Utility Agent cum Driver - 07  
சம்பளம்: மாதம் ரூ.14,040
வயதுவரம்பு: 01.02.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.03.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல், மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் தகுதி, பணி அனுவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/455_1_AIATSL_Adtv_MMD.PDF என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளராக கோபால் பக்லே நியமனம்
மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளராக கோபால் பக்லே நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் வெளியுறவு விளம்பரங்களுக்கான இணைச் செயலர் பொறுப்பையும் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபால் பக்லே, இஸ்லாமாபாத் நாட்டுக்கான துணைத் தூதராக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். மேலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளின் விவகாரங்களை கையாளும் வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளராகவும் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.
மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வந்த விகாஸ் ஸ்வரூப், கனடா நாட்டுக்கான இந்திய தூதராக அண்மையில் நியமனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த பொறுப்புக்கு புதிதாக கோபால் பக்லே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கோபால் பக்லேவுக்கு, விகாஸ் ஸ்வரூப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோபால் பக்லே விரைவில் அதிகாரப் பூர்வமாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய விண்வெளித் துறை ஆய்வகத்தில் டெக்னிக்கல் உதவியாளர், அதிகாரி பணி
மத்திய அரசு நிறுவனமான தேசிய விண்வெளித் துறை ஆய்வகங்களில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர், டெக்னிக்கல் அதிகாரி மற்றும் முதுநிலை டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.1/2017  தேதி: 24.02.2017
மொத்த காலியிடங்கள்: 28
பணியிடம்: கர்நாடகா
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Technical Assistant - 25
தகுதி: பொறியியல் துறையில் மின் மற்றும் தொலைத்தொடர்பு அல்லது மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.  
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200/4,600
பணி: Technical Officer - 01
தகுதி: பொறியியல் துறையில் ஏரோநட்டிக்கல், விண்வெளி பொறியியல் துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200/4,600
பணி: Senior Technical Officer - 02
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.03.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nal.res.in/pdf/All%20India%20advt%20%20group%20III%20%204%20of%202016.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
இந்திய வனப் பணி தேர்வு: யூபிஎஸ்சி அறிவிப்பு
இந்திய வனத்துறையில் 2017-18 ஆம் ஆண்டிற்கான பணியிடங்களை நிரப்புவதற்கான இந்திய வனப் பணி தேர்வுக்கான அறிவிப்பை யூபிஎஸ்சி என அழைக்கப்படும் மத்திய மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 110
பணி: Indian Forest Service Examination
தகுதி: கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியமைப்பியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது விவசாயம், வனவியல் அல்லது பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 21 - 32க்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, புதுச்சேரி
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.upsc.gov.in/sites/default/files/Engl_IFS_2017_0.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விளையாட்டு :

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்றார் ஜிது ராய்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஜிது ராய், 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம், தில்லியில் நடைபெற்று வரும் இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, ஆடவருக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 8 பேர் பங்கேற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் டோமோயுகி மட்சுடா மொத்தம் 240.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், அவரை அடுத்து வியத்நாமின் ஜுவான் வின் ஹோவாங் 236.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
இந்திய வீரர் ஜிது ராய் மொத்தம் 216.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். முதல் சுற்றில் 7-ஆவது இடத்தில் இருந்த ஜிது ராய், 2-ஆவது சுற்றில் 98.7 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
இதையடுத்து நடைபெற்ற இறுதிச் சுற்றில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், வெள்ளிப் பதக்க வாய்ப்பை சற்றே நெருங்கினாலும், பின்னர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.
இந்திய மகளிர் ஹாக்கி தலைமை பயிற்சியாளராக ஜோயர்ட் மரைன் நியமனம்
இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கான தலைமை பயிற்சியாளராக நெதர்லாந்தைச் சேர்ந்த ஜோயர்ட் மரைன்  நியமிக்கப்பட்டுள்ளார்.
நெதர்லாந்து மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளரான மரைன், அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக நீடிப்பார் என ஹாக்கி இந்தியா அமைப்பு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அவருக்கான இணை பயிற்சியாளராக சக நாட்டவரான எரிக் வோனிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஜோயர்ட் மரைன் கூறுகையில், ’இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்ற மிகுந்து ஆர்வத்துடன் உள்ளேன். நான் அறிந்த வரையில், இந்திய அணியினர் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்பதுடன், கடுமையாக உழைக்கக் கூடியவர்கள்.
உலக ஹாக்கியில் சக்தி வாய்ந்த ஒரு அணியாக தங்களை நிலைநாட்டிக் கொள்வதற்கான திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறேன்' என்றார்.

வர்த்தகம் :

ஜிஎஸ்டி வரி ஜூலை 1 முதல் அமல்: மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி சட்டம் (ஜிஎஸ்டி) வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை உறுதி செய்வதற்காக ஜிஎஸ்டி மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் அந்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து நடந்து வந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ரூ.1.5 கோடிக்கும் குறைவாக விற்றுமுதல் ஈட்டும் நிறுவனங்களுக்கான வரி மதிப்பீடு மற்றும் வசூல் நடவடிக்கைகளில் 90 சதவீதத்தை மாநில அரசுகள் மேற்கொள்வதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதேபோன்று ரூ.1.5 கோடிக்கு அதிகமாக விற்றுமுதல் ஈட்டும் நிறுவனங்களுக்கான வரி மதிப்பீடு, வசூலிப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் சரிபாதியாக பிரித்துச் செயல்படுத்தவும் இசைவு தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு
ஜியோ வருகைக்குப்பின் தொலைத்தொடர்பு சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் புதுப்புது சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கால் மற்றும் டேட்டாவுக்கான ரோமிங் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் ரோமிங் கட்டணங்களை வழங்கவும் ஏர்டெல் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நாங்கள் உள்நாட்டு ரோமிங் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளது. 

Click here to download 27th & 28th February Review in Tamil

No comments:

Post a Comment